ரூ.100கோடியில் அமைக்கப்பட்ட அவசரக்கால தரையிறங்கும் சாலையை திறந்து வைத்த வைத்த பிரதமர் மோடி!

Estimated read time 1 min read

அசாமில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அவசரகால தரையிறங்கும் நெடுஞ்சாலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

அசாம் மாநிலம் திப்ருகர் மாவட்டத்தில் இந்தியா – சீனா எல்லையான மோரன் புறவழிச் சாலையில், சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 4 புள்ளி 2 கிலோ மீட்டர் தூர அவசரகால தரையிறங்கும் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

அவசர காலத்தில் விமானங்கள், ஹெலிகாப்டர் உள்ளிட்டவை தரையிறங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சாலையை வீரர்களின் பயன்பாட்டுக்காக பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

முன்னதாக அசாமின் சாபுவா விமான நிலையத்திலிருந்து பிரதமர் மோடி பயணித்த “சி-130ஜே” ரக போர் விமானம், இந்த சாலையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டு வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டது.

பின்னர் அங்கு இந்திய விமானப்படை சார்பில் 40 நிமிடங்கள் நடைபெற்ற விமான கண்காட்சியை பிரதமர் மோடி ஆர்வத்துடன் கண்டு ரசித்தார்.

இதில் தேஜாஸ், சுகோய், ரஃபேல் மற்றும் பிற போர் விமானங்கள் வானில் பறந்து சாகசம் செய்தன.

You May Also Like

More From Author