நீட் மறுதேர்வு – வரும் 22ஆம் தேதி வரை இந்தியாவில் டெலிகிராம் செயலி பயன்படுத்த தடை!

Estimated read time 0 min read

நீட் மறுதேர்வுக்காக வரும் 22ஆம் தேதி வரை இந்தியாவில் டெலிகிராம் செயலி பயன்படுத்த மத்திய அரசு தடைவிதித்துள்ளது.

இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில், தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த தற்காலிக தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த புதிய தலையீட்டில் இரண்டு முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. முதலாவதாக, ஜூன் 22 வரை இந்தியாவில் டெலிகிராம் செயலியைப் பயன்படுத்துவதற்கான பொதுமக்களின் அணுகல் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டாவதாக, இந்தியாவில் ஏற்கனவே அனுப்பப்பட்ட செய்திகளை எடிட் செய்யும் வசதியை வரும் ஜூன் 30 வரை முடக்குமாறு டெலிகிராம் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்காலிகத் தடை லட்சக்கணக்கான மாணவர்கள் பாதுகாப்பான சூழலில் தேர்வு எழுத பெரிதும் உதவும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

You May Also Like

More From Author