ரஷ்ய எண்ணெய் விவகாரம்: யார் அழுத்தத்திற்கும் பணிய மாட்டோம் என ஜெய்சங்கர் அதிரடி  

Estimated read time 0 min read

முனிச் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குறித்து மிகத் தெளிவான விளக்கத்தை அளித்தார்.
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்கா கூறி வரும் நிலையில், இந்தியாவின் முடிவுகள் எப்போதும் அதன் மூலோபாயத் தன்னாட்சி அடிப்படையிலேயே இருக்கும் என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
இது இந்தியாவின் வரலாறு மற்றும் வளர்ச்சியோடு பின்னிப் பிணைந்த ஆழமான கொள்கை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

You May Also Like

More From Author