சிவராத்திரியை ஒட்டி, கன்னியாகுமரியில் உள்ள 12 சிவாலயங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் கோஸ் யாத்திரை நடைபெற்றது.
https://youtu.be/KVcELgcwQPw?si=heF-IyvTNJuMiTcj
சிவராத்திரியை ஒட்டி, அனைத்து சிவன் கோயில்களிலும் சிவாலய ஓட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கன்னியாகுமரியில் உள்ள கோயில்களிலும் சிவாலய ஓட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
12 கோயில்களில் நடைபெற்ற சிவாலய ஓட்டங்களில் ஆர்எஸ்எஸ் சேவகர்கள் அணிவகுத்து கோஸ் யாத்திரை நிகழ்வை நடத்தினர்.
திருமலை, திக்குறிச்சி உட்பட 12 பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் நடைபெற்ற கோஸ் யாத்திரையில் பங்கேற்ற ஆர்எஸ்எஸ் சேவகர்கள், பேண்டு வாத்தியங்கள் முழங்க செங்கோல் ஏந்தியபடி சென்றனர். இதனை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
