“டி.ஆர்.பாலுவை ‘3 மணி நேரம் குறுக்கு விசாரணை’ செஞ்சேன்” நீதிமன்றத்துல அண்ணாமலை கொடுத்த மரண ஷாக்….!! 

Estimated read time 1 min read

திமுக எம்பி டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு விவகாரத்தில், முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி அதிரடி காட்டியுள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நீதிமன்றத்தில் டி.ஆர்.பாலுவை சுமார் 3 மணி நேரம் குறுக்கு விசாரணை செய்தேன்” என்று கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார். அதுமட்டுமில்லாமல், இந்த விசாரணை இத்துடன் முடிந்துவிடவில்லை என்றும், மற்றொரு நாளில் மீண்டும் குறுக்கு விசாரணை தொடரும் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

”இந்த வழக்கின் மூலமாக திமுக-வுக்கு ஒரு பாடம் புகட்டுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று பேசிய அண்ணாமலை, விரைவில் அனைத்து உண்மைகளும் வெளிச்சத்திற்கு வரும் எனச் சவால் விடுத்துள்ளார். ஒரு பக்கம் திமுக தரப்பு அண்ணாமலை மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், அண்ணாமலை நீதிமன்றத்தையே போர்க்களமாக மாற்றி டி.ஆர்.பாலுவை விசாரணையில் திணறடித்ததாகக் கூறுவது அரசியல் வட்டாரத்தில் பெரிய டாக்-ஆப்-தி-டவுன் ஆக மாறியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author