அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார்!

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார்.

பல்வேறு துறைகளில் இந்தியா-உக்ரைன் உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

தற்போது நடைபெற்று வரும் ரஷ்யா-உக்ரைன் மோதல் குறித்து விவாதித்த பிரதமர் மோடி, இந்தியாவின் மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையை மீண்டும் வலியுறுத்தியதுடன், பேச்சுவார்த்தை மற்றும் ராஜிய நடவடிக்கைகளை முன்னோக்கி செல்ல அழைப்பு விடுத்தார்.

இருதரப்பினருக்கும் இடையேயான அனைத்து பிரச்சனைகளுக்கும் விரைவான மற்றும் அமைதியான முறையில் தீர்வுக்கான அனைத்து முயற்சிகளையும் இந்தியா ஆதரிக்கிறது என்று அவர் எடுத்துரைத்தார். அமைதியான தீர்வுக்கு ஆதரவாக இந்தியா தன்னால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ளும் என்று கூறினார்.

உக்ரைன் மக்களுக்காக இந்தியா தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்கி வருவதை அதிபர் ஜெலன்ஸ்கி பாராட்டினார்.

இரு தலைவர்களும் தொடர்பில் இருக்க ஒப்புக் கொண்டனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author