மார்ச் 1ஆம் தேதி முதல் ரயில் டிக்கெட் முன்பதிவில் மிகப்பெரிய மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. அதாவது, வெளியூர் ரயில் மற்றும் புறநகர் ரயிலில் செல்பவர்களுக்கு இது உதவும். அதாவது, மார்ச் 1ஆம் தேதி முதல் யுடிஎஸ் செயலி இயங்காது என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. அதாவது, இந்தியா முழுவததும் யுடிஎஸ் செயலியை நிறுத்தப்படுகிறது. இதனால், முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள், நடைமேடை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பயணிகள் பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில், யுடிஎஸ் செயலி மார்ச் 1 முதல் முன்பதிவு நிறுத்தப்படும் நிலையில், டிக்கெட்டுகளை பெற முடியாது.
இதற்கு பதிலாக ரயில் ஒன் செயலியை பயன்படுத்த வேண்டும் என இந்தியன் ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.
ரயில் ஒன் செயலி மூலம் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள், விரைவு ரயில் டிக்கெட்டுகள், நடைமேடை டிக்கெட்டுகளை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
அதாவது, ஒரே செயலி மூலம் நீங்கள் பல சேவைகளுக்கு பயன்படுத்தலாம். ரயில் ஒன் செயலியை ஐஆர்சிடிசி சான்று மற்றும் யுடிஎஸ் பாஸ்வோர்டு மூலம் நீங்கள் ரயில் ஒன் செயலியை லாகின் செய்து கொள்ளலாம்.
ரயில் ஒன் செயலியை இந்தியன் ரயில்வே கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது. பல சேவைகளுக்கு ஒரே செயலியை பயன்படுத்த இந்த செயலி உதவும்.
ரயில் ஒன் செயலி மூலம் பயணிகள் முன்பதிவு செய்யப்படாத மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம், பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளை வாங்கலாம், நேரடி ரயில் இயக்க நிலையைச் சரிபார்க்கலாம், பெட்டி நிலை விவரங்களைப் பார்க்கலாம், PNR நிலையைக் கண்காணிக்கலாம் மற்றும் உணவு-ஆன்-ட்ராக் சேவைகள் மூலம் உணவை ஆர்டர் செய்யலாம்.
மேலும், டிஜிட்டல் கட்டண முறையை ஊக்கப்படுத்தும் வகையில், இந்திய ரயில்வே ரயில் ஒன் செயலி வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு 3 சதவீதம் தள்ளுபடியை வழங்குகிறது. இந்த சலுகை 2026 ஜூலை வரை அமலில் இருக்கும் என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.
பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தில் உள்ள கெராபாரி பகுதியில், சனிக்கிழமை (ஏப்ரல் 11) அன்று மாலை வேளையில் ஒரு மிகக்கோரமான சாலை விபத்து நிகழ்ந்தது. [மேலும்…]
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசைக் கட்டுப்படுத்த, டெல்லி அரசு மின்சார வாகனக் கொள்கை 2026-2030 வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. போக்குவரத்துத் துறையின் இவி [மேலும்…]
சீன உள்மங்கோலிய தாராள வர்த்தக சோதனை மண்டலம் பற்றிய ஒட்டுமொத்த திட்டம் வெளியிடப்பட்டதுடன், சீனாவில் தாராள வர்த்தக சோதனை மண்டலங்களின் எண்ணிக்கை 23ஆக [மேலும்…]
அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் குறைத்து, தனது நாட்டின் டிஜிட்டல் இறையாண்மையை நிலைநாட்டும் வகையில் பிரான்ஸ் அரசு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது. [மேலும்…]
பெய்ஜிங்கில் 10ஆம் நாள் நடைபெற்ற மேசை பந்துத் தூதாண்மையின் 55ஆவது ஆண்டு நிறைவுக் கூட்டம் மற்றும் சீன-அமெரிக்க இளைஞர்களின் உடற்பயிற்சிப் பரிமாற்ற நிகழ்ச்சிகளின் துவக்க [மேலும்…]
மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில், அரையாண்டு அடிப்படையில் சொத்து வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. அதில், அரையாண்டின் முதல், 30 நாட்களுக்குள் சொத்து வரியை செலுத்துவோருக்கு, 5 [மேலும்…]