மார்ச் 1 முதல் அதிரடி மாற்றம்.. அலர்ட் பயணிகளே..!!

Estimated read time 1 min read

மார்ச் 1ஆம் தேதி முதல் ரயில் டிக்கெட் முன்பதிவில் மிகப்பெரிய மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. அதாவது, வெளியூர் ரயில் மற்றும் புறநகர் ரயிலில் செல்பவர்களுக்கு இது உதவும். அதாவது, மார்ச் 1ஆம் தேதி முதல் யுடிஎஸ் செயலி இயங்காது என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. அதாவது, இந்தியா முழுவததும் யுடிஎஸ் செயலியை நிறுத்தப்படுகிறது. இதனால், முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள், நடைமேடை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பயணிகள் பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில், யுடிஎஸ் செயலி மார்ச் 1 முதல் முன்பதிவு நிறுத்தப்படும் நிலையில், டிக்கெட்டுகளை பெற முடியாது.
இதற்கு பதிலாக ரயில் ஒன் செயலியை பயன்படுத்த வேண்டும் என இந்தியன் ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.
ரயில் ஒன் செயலி மூலம் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள், விரைவு ரயில் டிக்கெட்டுகள், நடைமேடை டிக்கெட்டுகளை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
அதாவது, ஒரே செயலி மூலம் நீங்கள் பல சேவைகளுக்கு பயன்படுத்தலாம். ரயில் ஒன் செயலியை ஐஆர்சிடிசி சான்று மற்றும் யுடிஎஸ் பாஸ்வோர்டு மூலம் நீங்கள் ரயில் ஒன் செயலியை லாகின் செய்து கொள்ளலாம்.
ரயில் ஒன் செயலியை இந்தியன் ரயில்வே கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது. பல சேவைகளுக்கு ஒரே செயலியை பயன்படுத்த இந்த செயலி உதவும்.
ரயில் ஒன் செயலி மூலம் பயணிகள் முன்பதிவு செய்யப்படாத மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம், பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளை வாங்கலாம், நேரடி ரயில் இயக்க நிலையைச் சரிபார்க்கலாம், பெட்டி நிலை விவரங்களைப் பார்க்கலாம், PNR நிலையைக் கண்காணிக்கலாம் மற்றும் உணவு-ஆன்-ட்ராக் சேவைகள் மூலம் உணவை ஆர்டர் செய்யலாம்.
மேலும், டிஜிட்டல் கட்டண முறையை ஊக்கப்படுத்தும் வகையில், இந்திய ரயில்வே ரயில் ஒன் செயலி வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு 3 சதவீதம் தள்ளுபடியை வழங்குகிறது. இந்த சலுகை 2026 ஜூலை வரை அமலில் இருக்கும் என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.

You May Also Like

More From Author