அமெரிக்க உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்து விட்டதால் ஒருதரப்பு வரிகளை கைவிடுமாறு டிரம்ப் நிர்வாகத்தை சீனா வலியுறுத்தியுள்ளது.
உலகில் உள்ள பல நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அமெரிக்க அதிபா் டிரம்ப் பரஸ்பர வரி விதித்தாா். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அமெரிக்க உச்சநீதிமன்றம், உலக நாடுகளுக்கு டிரம்ப் விதித்த பரஸ்பர வரிகளை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் பொருள்கள் மீது 15 சதவீத வரி விதிக்கும் புதிய பிரகடனத்தில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டாா். தற்காலிகமாக 150 நாள்களுக்கு விதிக்கப்படும் இந்த வரிவிதிப்பு செவ்வாய்க்கிழமை முதல் அமலாகிறது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பே வந்துவிட்ட சூழலில், ஒருதரப்பு வரிகளை கைவிடுங்கள் என அமெரிக்க அரசை சீனா வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய சீனாவின் வர்த்தக அமைச்சக செய்தி தொடர்பாளர், வர்த்தகப்போரில் யாருமே வெற்றி பெற முடியாது என கூறினார். அமெரிக்காவின் ஒருதரப்பு வரி விதிப்பு நடவடிக்கைகள், சர்வதேச வர்த்தக மற்றும் பொருளாதார விதிகளை மீறுவது மட்டுமின்றி அமெரிக்காவின் உள்நாட்டு சட்டங்களை மீறுவது ஆகும் எனவும் அவர் தெரிவித்தார்
