ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே வெடித்துள்ள மோதலால் வான்பரப்புகள் மூடப்பட்டு, சர்வதேச விமான போக்குவரத்து முடங்கியுள்ளது.
இதுவரை இந்திய நிறுவனங்களின் 1,221 விமானங்களும், வெளிநாட்டு நிறுவனங்களின் 388 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பயணிகளை மீட்கும் பொருட்டு, இன்று மொத்தம் 58 சிறப்பு விமானங்கள் இயக்கப்படவுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அறிவிப்பின்படி,
இண்டிகோ: 30 விமானங்கள்
ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: 23 விமானங்கள்.
ஸ்பைஸ்ஜெட்: ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து (UAE) டெல்லி, மும்பை மற்றும் கொச்சிக்கு 8 சிறப்பு மீட்பு விமானங்களை இயக்குகிறது.
மத்திய கிழக்கில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இன்று 58 சிறப்பு விமானங்கள் இயக்கம்
