“இந்தியாதான் கிரிக்கெட்டை உலகத்துக்கே கத்துக்கொடுக்குது!”…

Estimated read time 0 min read

டி20 உலகக்கோப்பை 2026 அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, உலகமே இந்திய அணியின் ஆட்டத்தைக் கண்டு மிரண்டு போயுள்ளது.

இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக, “இந்த உலகத்துக்கே கிரிக்கெட்டை இந்தியா தான் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது” என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் பொதுமக்களிடையே பேசியது பெரும் வைரலாகி வருகிறது.

சஞ்சு சாம்சன் விளாசிய 89 ரன்களும், இந்திய அணியின் ஒட்டுமொத்த பலமும் இங்கிலாந்தை நிலைகுலையச் செய்துள்ளன. இந்த அதிரடி வெற்றியைக் கண்டு பாகிஸ்தான் நாட்டு மக்களும் இந்தியாவைப் பாராட்டித் தள்ளி வருகின்றனர்.

“இந்தியாவின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டுமே அபாரமாக இருந்தது, அவர்கள் வெற்றிக்கு முற்றிலும் தகுதியானவர்கள்” என்று பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முகமது அமீர் போன்றவர்களின் தவறான கணிப்புகளைப் பொய்யாக்கி இந்தியா இறுதிப்போட்டிக்குள் நுழைந்ததை, நவ்ஜோத் சிங் சித்து போன்ற முன்னாள் வீரர்களும் ஜாலியாகக் கிண்டல் செய்து கொண்டாடி வருகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author