விருதுநகரில் கோர விபத்து! பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 17 பேர் பலி  

Estimated read time 0 min read

விருதுநகர் மாவட்டம், கட்டனார்பட்டியில் இன்று (ஏப்ரல் 19) நடைபெற்ற பட்டாசு ஆலை வெடி விபத்து, அப்பகுதியையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது நிகழ்ந்த இந்த பயங்கர விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 17 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், படுகாயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த விபத்து, பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மீண்டும் ஒருமுறை கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.

You May Also Like

More From Author