சென்னை புளியந்தோப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பரப்புரையில் ஈடுபட்டார்.
பரப்புரையில் பேசிய டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போல ஒரு தலைவர் உங்களுக்கு கிடைக்கமாட்டார்.
தமிழ்நாட்டுக்கு ஏராளமான நன்மைகளை செய்துள்ளார்.தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவுக்கு பாடுபடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் போல வேறு எந்த மாநிலத்திலும் ஒரு திட்டமும் செயல்படுத்தவில்லை. பிரதமர் மோடிக்கு எதிராக வலுவான குரல் கொடுக்கும் தலைவர் ஸ்டாலின்.அதிமுக தற்போது பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதை முழுமையாக கைப்பற்ற பாஜக முயற்சிக்கிறது. நிதிஷ்குமார் பீகாரில் சந்தித்த அரசியல் நிலை போன்றதே அதிமுகக்கும் ஏற்படும். ஸ்டாலினின் நலத்திட்டங்கள் தொடர வேண்டும் என்றால், மக்கள் திமுக ஆட்சியை ஆதரிக்க வேண்டும்” என்றார்.
