ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று காலை நிகழ்ந்த பேருந்து விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 20-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர்.
ராம்நகரில் இருந்து உதம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த பொதுப் போக்குவரத்து பேருந்து, உதம்பூர் மாவட்டத்தின் ககோட் என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்தது.
விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே மீட்புப் படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்குப் பல ஆம்புலன்ஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், இந்த சோகமான சம்பவம் குறித்து தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
உதம்பூர் துணை ஆணையர் மிங்கா ஷெர்பாவுடன் தான் தொடர்ந்து பேசி வருவதாகவும், மீட்புப் பணிகள் உடனடியாகத் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் பயங்கர விபத்து: உதம்பூரில் பேருந்து கவிழ்ந்து 15 பேர் பலி
