காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் திடீர் பரபரப்பு…

Estimated read time 0 min read

சென்னையில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தின் போது, அக்கட்சியின் மாநில தேர்தல் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் திடீரென மயங்கி விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணிகள் மற்றும் வியூகங்கள் குறித்து விவாதிப்பதற்காக, சென்னை சத்தியமூர்த்தி பவனில் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மேலும் தீவிரமான விவாதங்கள் மற்றும் ஆலோசனைகளில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கிரிஷ் சோடங்கர் மயக்கமடைந்து சரிந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கட்சி நிர்வாகிகள், உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இதனால் மருத்துவமனையில் அவருக்கு அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களால் தீவிர பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தேர்தல் பணிகளுக்காகச் சுழன்று பணியாற்றியதால் ஏற்பட்ட உடல் சோர்வு மற்றும் மன அழுத்தம் காரணமாக இந்த மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தற்போது சிகிச்சைக்குப் பின் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் மற்றும் காங்கிரஸ் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவம் சத்தியமூர்த்தி பவனில் இருந்த தொண்டர்களிடையே தற்காலிகப் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், அவர் குணமடைந்து வரும் செய்தி நிம்மதியை அளித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author