“நாளை முதல் ஸ்கூல்ல புது ரூல்ஸ்” வந்தே மாதரத்திற்கு கிடைத்த அங்கீகாரம்…. மத்திய அரசு அதிரடி….!! 

Estimated read time 1 min read

இந்தியாவின் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு உரிய அங்கீகாரத்தையும் மரியாதையையும் வழங்கும் வகையில், ஒன்றிய உள்துறை அமைச்சகம் புதிய அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

இதன்படி, இனிவரும் காலங்களில் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளிகளில் அன்றாட வகுப்புகளைத் தொடங்குவதற்கு முன்பாக ‘வந்தே மாதரம்’ பாடலைக் கூட்டுப் பாடலாகப் பாடுவது கட்டாயமாக்கப்பட உள்ளது.

குறிப்பாக, பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய அசல் பாடலில் உள்ள அனைத்து 6 பத்திகளையும் உள்ளடக்கிய முழுமையான வடிவம் (சுமார் 3 நிமிடம் 10 விநாடிகள்) இனி பாடப்படும் என்றும், தேசிய கீதத்திற்கு அளிக்கப்படும் அதே மரியாதையை இப்பாடலுக்கும் அளிக்கும் வகையில் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் நாட்டின் 150-வது ‘வந்தே மாதரம்’ ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகக் கொண்டுவரப்பட்டுள்ளது. தேசப்பற்றை மாணவர்களிடையே விதைக்கும் நோக்கில் பள்ளிகளில் காலை வழிபாட்டு கூட்டங்களில் இப்பாடலை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இதற்கான நடைமுறைகள் நாளை முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகளைப் பள்ளிகள் மற்றும் அரசுத் துறைகள் துரிதப்படுத்தி வருகின்றன.

இது ஒருபுறம் வரவேற்பைப் பெற்றாலும், தேசிய கீதத்திற்கு முன்பாக இப்பாடலை இசைப்பது தொடர்பான புதிய விதிமுறைகள் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் ஒரு விவாதத்தை உருவாக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author