சவுதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தை (Prince Sultan Air Base) குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணைகளை சவுதி ராணுவம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது.
புதன்கிழமை அதிகாலை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, ஈரானால் ஏவப்பட்ட ஏழு பாலிஸ்டிக் ஏவுகணைகளை சவுதி அரேபியா சுட்டு வீழ்த்தியுள்ளது.
இதில் ஆறு ஏவுகணைகள் பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தை நோக்கியும், மற்றொன்று கிழக்கு மாகாணத்தை நோக்கியும் ஏவப்பட்டவை.
இது தவிர, ஷய்பா எண்ணெய் வயல் மற்றும் அல்-கர்ஜ் உள்ளிட்ட பகுதிகளை குறிவைத்து வந்த 16 ட்ரோன்களையும் (Drones) பாதுகாப்பு அமைச்சகம் இடைமறித்து அழித்துள்ளது.
ஈரான் ஏவுகணைகளை தாக்கி அழித்த சவுதி அரேபியா
