உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 37 ஆக உயர்வு  

Estimated read time 0 min read

இந்திய உச்ச நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையை தலைமை நீதிபதி தவிர்த்து தற்பொழுது 33 இல் இருந்து 37 ஆக உயர்த்தி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒரு புதிய அவசரச் சட்டத்தைப் பிறப்பித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் தற்பொழுது நடைமுறையில் இல்லாத சூழலிலும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்கும் நோக்கிலும் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவரின் இந்த புதிய உத்தரவைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் ஒட்டுமொத்த நீதிபதிகளின் கட்டமைப்பில் ஒரு முக்கியப் புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

You May Also Like

More From Author