அமெரிக்கா – ஈரான் போர் காரணமாக உலகளவில் எரிசக்தி சூழலில் நிச்சயமற்ற நிலை நிலவினாலும், இந்தியாவில் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விநியோகம் சீராக உள்ளதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்படும் என்று அச்சமடைந்து மக்கள் முன்கூட்டியே சிலிண்டர்களைப் பதிவு செய்யவோ அல்லது பதுக்கவோ தேவையில்லை என்று பெட்ரோலிய அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா புதன்கிழமை (மார்ச் 11) அன்று தெரிவித்துள்ளார்.
எல்பிஜி சிலிண்டர் 2.5 நாட்களில் டோர் டெலிவரி செய்யப்படும் என மத்திய அரசு உறுதி
