அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில், நடிகை ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த ‘தாய் கிழவி’ திரைப்படம், பிப்ரவரி 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை படைத்தது.
தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, ‘தாய் கிழவி’ திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளம் கைப்பற்றியுள்ளது.
திரையரங்குகளில் வெளியாகி 5 வாரங்களுக்குப் பிறகு, அதாவது ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த படம் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
