அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களத்தில் முதலாவதாக கூட்டணியை உறுதி செய்த அதிமுக – பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை இன்னும் வெளிப்படையாக தொடங்கவில்லை.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளிடையே நிலவும் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் குழப்பம் நீடித்து வரும் நிலையில் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விரைவில் தமிழகம் வர உள்ளார்.
இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை திடீர் பயணமாக டெல்லி செல்வது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக அதிமுகவின் செல்வாக்குமிக்க தொகுதிகளான சென்னை தி.நகர், மயிலாப்பூர், விருகம்பாக்கம், வேளச்சேரி, கோவை வடக்கு, கவுண்டம்பாளையம், மதுரை தெற்கு, திருப்பரங்குன்றம், அவிநாசி, ஓசூர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட தொகுதிகளை பாஜகவும் பட்டியலிட்டு, அதிமுகவிடம் தொடர்ந்து கேட்டு வருவதால் தொகுதிகளை இறுதி செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் அதிமுக – அமமுக இரண்டும் சம பலத்தில் உள்ள பல்வேறு தொகுதிகளை கேட்டுவரும் நிலையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நிறைவுசெய்ய முடியாமல் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
இதனிடையே, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை விரைவில் முடிவுக்கு கொண்டு வரவும், அதிமுக – பாஜக – அமமுக இடையே சுமூக முடிவை எடுப்பது தொடர்பாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பின்படி, அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழாவிற்காக பக்தர்கள் நலன் [மேலும்…]
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு 2 ஆயிரத்து 117 கோடி ரூபாயை முன்கூட்டியே விடுவிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒப்புதல் அளித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட [மேலும்…]
கர்நாடகாவின் வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக, பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் உறுதியளித்துள்ளார். கர்நாடக மாநிலம், மைசூருவில் நடைபெற்ற [மேலும்…]
தமிழக அரசின் நீர்வளத்துறையின் புதிய செயலாளராக பிரசாந்த வடநரே நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. அவர் ஏற்கனவே இருந்த [மேலும்…]
கேரளாவில் பெய்து வரும் அதி தீவிர கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த 31ஆம் தேதி [மேலும்…]
அமெரிக்க-சீன வணிகக் கவுன்சிலின் அழைப்பை ஏற்று, சர்வதேச வர்த்தக முன்னேற்றத்துக்கான சீனக் கவுன்சிலின் ஏற்பாட்டில், சீனத் தொழில் முனைவோர்கள் பிரதிநிதிக் குழு ஜூலை 27 [மேலும்…]
வரலாற்றுச் சிறப்புமிக்க 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை இந்தியாவின் அகமதாபாத் நகரம் நடத்துவதற்கான அதிகாரப்பூர்வப் பயணத்தின் முதல் கட்டம் தொடங்குகிறது. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் [மேலும்…]