அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களத்தில் முதலாவதாக கூட்டணியை உறுதி செய்த அதிமுக – பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை இன்னும் வெளிப்படையாக தொடங்கவில்லை.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளிடையே நிலவும் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் குழப்பம் நீடித்து வரும் நிலையில் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விரைவில் தமிழகம் வர உள்ளார்.
இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை திடீர் பயணமாக டெல்லி செல்வது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக அதிமுகவின் செல்வாக்குமிக்க தொகுதிகளான சென்னை தி.நகர், மயிலாப்பூர், விருகம்பாக்கம், வேளச்சேரி, கோவை வடக்கு, கவுண்டம்பாளையம், மதுரை தெற்கு, திருப்பரங்குன்றம், அவிநாசி, ஓசூர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட தொகுதிகளை பாஜகவும் பட்டியலிட்டு, அதிமுகவிடம் தொடர்ந்து கேட்டு வருவதால் தொகுதிகளை இறுதி செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் அதிமுக – அமமுக இரண்டும் சம பலத்தில் உள்ள பல்வேறு தொகுதிகளை கேட்டுவரும் நிலையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நிறைவுசெய்ய முடியாமல் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
இதனிடையே, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை விரைவில் முடிவுக்கு கொண்டு வரவும், அதிமுக – பாஜக – அமமுக இடையே சுமூக முடிவை எடுப்பது தொடர்பாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் 12 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் [மேலும்…]
மேற்கு ஆசியாவில் தொடரும் மோதல், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் சரக்கு அனுப்பும் தாமதங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த நெருக்கடியால் வர்த்தக பாதைகள் தடைபட்டிருப்பது, சரக்குகளின் போக்குவரத்தைப் [மேலும்…]
“படிப்பு மட்டும் போதாது, காதலும் வேணும்!” என மாணவர்களுக்கு அதிரடியாக விடுமுறை அறிவித்துள்ளது சீனாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகம். தென்மேற்கு சீனாவில் உள்ள சிச்சுவான் [மேலும்…]
அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் வசதியில் தமிழக அரசின் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசிய பணியில் [மேலும்…]
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான ராணுவ மோதல், தற்போது உலகளாவிய ‘எரிசக்தி போராக’ (Oil War) உருவெடுத்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் இரு நாடுகளும் [மேலும்…]
இவ்வாண்டின் முதல் 2 திங்களில் மட்டும் சீனாவில் இருந்து 3501 ரயில்களின் மூலம் 3.52 இலட்சம் கொள்கலன்கள் ஏற்றிச்செல்லப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை, கடந்த ஆண்டின் [மேலும்…]