ஈரான் உடனான போர் தீவிரமடைந்து வரும் சூழலில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஆயிரக்கணக்கான கூடுதல் அமெரிக்க வீரர்களை நிலைநிறுத்துவது குறித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தத் தகவல், சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் மீதான போர் தற்போது மூன்றாவது வாரத்தில் நுழைந்துள்ள நிலையில், களத்தில் அமெரிக்காவிற்கு கூடுதல் ஆப்ஷன்களை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
தற்போதைய சூழலைக் கையாள்வதற்கும், போரின் அடுத்தகட்ட நகர்வுகளைத் தீர்மானிப்பதற்கும் கூடுதல் படை பலம் அவசியம் என பென்டகன் அதிகாரிகள் கருதுகின்றனர்.
மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகளைத் தீவிரப்படுத்த ட்ரம்ப் நிர்வாகம் ஆலோசனை
