இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் இடையே கடந்த சில காலங்களாக நீடித்து வந்த கசப்பான உணர்வுகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளன.
இதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் 2026 போட்டிகளை வங்கதேசத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை அந்த நாட்டு அரசு இன்று (மார்ச் 28, 2026) அதிகாரப்பூர்வமாக நீக்கியுள்ளது.
இது இரு நாடுகளுக்கும் இடையிலான கிரிக்கெட் உறவில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.
ஐபிஎல் 2026: ஒளிபரப்பு தடையை நீக்கிய வங்கதேசம்! பிசிசிஐ-வங்கதேச வாரியம் இடையே இணக்கம்
