திரிபுராவின் காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) அனுராக் தங்கர், திங்களன்று அகர்தலாவில் உள்ள மாநில காவல்துறை தலைமையகத்தில் இறந்து கிடந்தார்.
அவருக்கு வயது 60.
அவர் தனது சர்வீஸ் பிஸ்டலால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாக சில அறிக்கைகள் கூறுகின்றன, வேறு சிலவோ அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறுகின்றன.
தி இந்து நாளிதழ், சில வட்டாரங்களை மேற்கோள் காட்டி, தங்கர் காலை 11:00 மணிக்கு அலுவலகக் கழிப்பறைக்குள் நுழைந்ததாகவும், ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால், அவரது ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அவர் இறந்து கிடந்ததை கண்டதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.
திரிபுரா டிஜிபி அலுவலகத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்
