அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் குறைத்து, தனது நாட்டின் டிஜிட்டல் இறையாண்மையை நிலைநாட்டும் வகையில் பிரான்ஸ் அரசு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது.
அரசு அலுவலகங்களில் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் மென்பொருளுக்குப் பதிலாக, ஓப்பன் சோர்ஸ் முறையில் இயங்கும் லினக்ஸ் மென்பொருளைப் பயன்படுத்தப் போவதாகப் பிரான்ஸ் அறிவித்துள்ளது.
“எங்கள் டிஜிட்டல் விதியை நாங்களே தீர்மானிக்கவும், அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீதான அதீத சார்பைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை அவசியம்” என பிரான்ஸ் அமைச்சர் டேவிட் அமீல் தெரிவித்துள்ளார்.
விண்டோஸிற்கு விடை கொடுக்கும் பிரான்ஸ்! அரசு அலுவலகங்களில் ‘லினக்ஸ்’ மென்பொருள் அமல்
