இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற 21 மணிநேர நீண்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தாலும், அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் ஒருமுறை நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏப்ரல் 21-ம் தேதியுடன் தற்போதைய தற்காலிகப் போர்நிறுத்தம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், அதற்குள் ஒரு நிரந்தர தீர்வை எட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளின் பிரதிநிதிகள் இரண்டாவது முறையாகச் சந்திப்பதற்கான இடங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக CNN செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்காக ஜெனிவா அல்லது இஸ்தான்புல் ஆகிய நகரங்கள் பரிசீலனையில் உள்ளன.
ஈரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த டொனால்ட் டிரம்ப் தயாராவதாக தகவல்
