இந்தியாவின் வேலையின்மை விகிதம் மார்ச் மாதத்தில் 5.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த பிப்ரவரி மாதத்தில் 4.9 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய புள்ளியியல் அலுவலகம் புதன்கிழமை (ஏப்ரல் 15) வெளியிட்டுள்ள ‘காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பு’ (PLFS) மாதமுறை அறிக்கையில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக நகர்ப்புறங்களில் நிலவும் வேலைவாய்ப்பின்மையே இந்த ஒட்டுமொத்த உயர்விற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
இந்திய வேலையின்மை விகிதம் 5.1 சதவீதமாக உயர்வு
