அசாம் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளில், பாஜக கூட்டணி 102 இடங்களைக் கைப்பற்றித் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.
இந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அசாமின் புதிய அரசு மே 12 ஆம் தேதி பதவியேற்க உள்ளதாகத் தலைமைச் செயலாளர் ரவி கோட்டா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கௌஹாத்தியில் உள்ள கான்பாராவில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் இந்த பிரம்மாண்டமான பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.
அசாமில் மே 12ல் புதிய பாஜக அரசு பதவியேற்பு விழா!
