அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல், தனது நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாகப் பாதித்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய பிரதமர், மோதலுக்கு முன்பு 300 மில்லியன் டாலராக இருந்த பாகிஸ்தானின் எண்ணெய் இறக்குமதிச் செலவு, போரின் காரணமாக 800 மில்லியன் டாலராக விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் பெட்ரோலிய நுகர்வு குறைந்திருப்பதையும் அவர் கவனித்ததாகக் கூறினார்.
‘எங்கள் செலவு 800 மில்லியன் டாலரை எட்டியுள்ளது’:ஈரான் போரினால் பாகிஸ்தான் பொருளாதாரத்தில் தாக்கம்
