லெய் ச்சிங்தே எசுவார்த்தினி மன்னரின் தனியார் விமானத்தின் மூலம், அந்நாட்டில் பயணம் மேற்கொண்டார். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் பதிலளிக்கையில்,
ஈலான் நகரில் நிலநடுக்கம் நிகழ்ந்த பிறகு, தைவான் மக்களின் பாதுகாப்பிலும் வாழ்க்கையிலும் கவனம் செலுத்தாமல், அன்னிய விமானம் மூலம் லெய் ச்சிங்தே ரகசியமாக கடத்தல் பாணி பயணம் மேற்கொண்டது. சர்வதேச கேலிக்கூத்தாக மாறியுள்ளது. ஒரே சீனா என்ற கோட்பாடு, சர்வதேச உறவின் அடிப்படை கோட்பாடாகவும் சர்வதேச சமூகத்தின் பொது கருத்தாகவும் திகழ்கின்றது என்று லெய் ச்சிங்தேவின் தோல்வியான அனுப்பவங்கள் வெளிக்காட்டின. மின் ஜின் கட்சி வெளிப்புற சக்திகளுடன் எவ்வாறு தொடர்பு மேற்கொண்டாலும் தைவான் சீனாவின் ஒரு பகுதியாக திகழ்கின்றது என்ற உண்மை மாறாது என்றார்.
