தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் குறித்து முன்வைத்த சவால்கள் மற்றும் கணிப்புகள் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு விஜய்யின் அரசியல் நகர்வு எப்படி இருக்கும் என்பது குறித்துப் பேசிய பாண்டே, ஒருவேளை விஜய் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காவிட்டால் அவர் மீண்டும் சினிமாவிற்கே திரும்பிவிடுவார் அல்லது அரசியலில் நிலைக்க மாட்டார் என்ற ரீதியில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
மேலும் தவெக-வின் வாக்கு சதவீதம் மற்றும் கூட்டணி நிலைப்பாடுகள் குறித்த பாண்டேவின் நேரடி சவால்கள், சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்களுக்கும் பாண்டே ஆதரவாளர்களுக்கும் இடையே பெரும் கருத்து மோதலாக வெடித்துள்ளது.
இருப்பினும், தற்போதைய தேர்தல் நிலவரப்படி தவெக பல தொகுதிகளில் முன்னிலை பெற்று வருவது பாண்டேவின் முந்தைய கணிப்புகளைப் பொய்யாக்கும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
View this post on Instagram
A post shared by CM Vijay (@cm.vijay.tamilnadu)
“>
இந்நிலையில் “விஜயால் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது” என்ற பாண்டேவின் சவாலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தவெக தொண்டர்கள் இந்த வெற்றியைத் கொண்டாடி வருகின்றனர். டெல்லி அரசியல் நகர்வுகள் மற்றும் தமிழகத்தின் தேர்தல் கள யதார்த்தம் குறித்து பாண்டே தொடர்ந்து விவாதித்து வந்தாலும், விஜய்யின் இந்த எழுச்சி தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றத்திற்கான தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.
