விமான பணியாளர்கள் கிடைக்காததால் விஸ்தாரா விமான நிறுவனம் ஒரு நாளைக்கு 25-30 விமானங்கள் வரை ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.
விஸ்தாரா விமான நிறுவனம் சராசரியாக தினமும் சுமார் 350 விமானங்களை இயக்கி வந்தது.
விஸ்தாரா விமானங்கள் ரத்து செய்யப்படுவதால் விமான கட்டண உயர்வு ஏற்படும் என்றும், குறிப்பாக மெட்ரோ வழித்தடங்களில் கட்டணங்கள் அதிகமாக உயரும் என்றும் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
டெல்லி-மும்பை வழித்தடத்தில் மட்டும் விஸ்தாரா ஒரு நாளைக்கு சுமார் 18 விமானங்களை இயக்கி வருகிறது. அதற்கு அடுத்தபடியாக இண்டிகோ நிறுவனம் 19 விமானங்களை இயக்கி வருகிறது.
எனவே, அந்த வாழைத்தடத்தில் விமான கட்டணம் உயர வாய்ப்புள்ளது.