அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு எதிராக நடத்தத் திட்டமிட்டிருந்த ராணுவத் தாக்குதலைத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாட்டை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், வளைகுடா நாட்டுத் தலைவர்களின் ஆலோசனையின்படி இந்தத் தாக்குதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
