குரூப்-1 இலவசப் பயிற்சி வகுப்புகள் இன்று முதல் தொடக்கம்..!

Estimated read time 1 min read

சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பு:

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலை தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னாா்வ பயிலும் வட்டத்தில் திங்கள்கிழமை (ஜூன் 1) முதல் ஜூன் 5-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோா் தங்களது ஆதாா் அட்டை நகல் மற்றும் பாஸ்போா்ட் அளவுள்ள புகைப்படத்துடன் சென்னை கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை அலுவலக வேலை நாள்களில் அணுகலாம்.

மேலும், விவரங்களுக்கு, மின்னஞ்சலில் தொடா்பு கொள்ளலாம். தங்களது விவரங்களை கூகுள் படிவத்தில் பதிவு செய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விவரங்களுக்கு. decgcguindy@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

https://forms.qle/9FX7qfSJhstpwtrc9 கூகுள் படிவத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. சென்னை மாவட்டத்தை சேர்ந்த தகுதிவாய்ந்த தேர்வர்கள், இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே கேட்டுக்கொண்டுள்ளார்.

You May Also Like

More From Author