உலக நாடுகளை மிரள வைத்த இந்தியாவின் மாபெரும் திட்டம்….!! 

Estimated read time 0 min read

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், ஓமனில் இருந்து குஜராத் வரை ஆழ்கடலுக்கு அடியில் 2,000 கிலோமீட்டர் தூரத்திற்கு மாபெரும் இயற்கை எரிவாயு குழாய் அமைக்கும் புதிய மெகா திட்டம் தயாராகி வருகிறது. உலக அளவில் பதற்றமான பகுதியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியின் புவிசார் அரசியல் நெருக்கடிகள் மற்றும் அச்சுறுத்தல்களைத் தவிர்த்து, நேரடியாக எரிவாயுவை இறக்குமதி செய்ய இத்திட்டம் பெரிதும் உதவும். இந்தியாவின் நீண்டகால ஆற்றல் சுதந்திரத்திற்கு இந்த ஆழ்கடல் திட்டம் ஒரு மிக முக்கிய திருப்புமுனையாக அமையும் என வல்லுநர்கள் நம்புகின்றனர்.

சுமார் ₹40,000 கோடி பிரம்மாண்ட முதலீட்டில் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டம், உலகிலேயே மிக நீளமான ஆழ்கடல் எரிவாயு திட்டங்களில் ஒன்றாக இருக்கும். கடலுக்கு அடியில் இருக்கும் அதிபயங்கர தொழில்நுட்ப சவால்கள் மற்றும் இயற்கை தடைகளைக் கடந்து, இந்த மெகா திட்டம் வெற்றிகரமாக நடைமுறைக்கு வரும் பட்சத்தில் இந்திய எரிசக்தி துறையில் இது ஒரு புதிய வரலாற்று மைல்கல்லாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like

More From Author