டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் சந்திக்கிறார்.
மேகதாது அணைத் திட்டம், கர்நாடகாவின் குடிநீர் தேவையையும், மின்சார உற்பத்தியையும் மேம்படுத்தும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு கூறி வருகிறது. ஆனால், இந்தத் திட்டம் தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவை பாதிக்கும் என்ற அச்சத்தால் தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதுதொடர்பாக ஏற்கனவே பிரதமர் மோடி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து டி.கே.சிவகுமார் மனு அளித்திருந்தார். இந்த நிலையில், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை இன்று சந்திக்கும் அவர், அணை கட்டுவது தொடர்பான கோரிக்கைகளை வழங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.
