அமெரிக்கா தனது கடற்படை மூலம் ஈரானைத் தாக்க இந்தியத் துறைமுகங்களைப் பயன்படுத்தி வருவதாக வெளியான செய்திகளை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் ராணுவ கர்னல் டக்ளஸ் மெக்ரிகோர் அளித்த நேர்காணல் ஒன்றில், அமெரிக்கக் கடற்படை இந்தியத் துறைமுகங்களை நாடிச் செல்வதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவு அமைச்சகம் இது ஒரு முற்றிலும் தவறான மற்றும் ஜோடிக்கப்பட்ட செய்தி என்று விளக்கம் அளித்துள்ளது.
அமெரிக்கா இந்தியத் துறைமுகங்களைப் பயன்படுத்துவதாகக் கூறப்படும் செய்தி: ஆதாரமற்றது என இந்தியா மறுப்பு
