இந்தியாவின் முக்கிய உள்நாட்டு உளவு அமைப்பான இண்டெலிஜென்ஸ் பீரோ (ஐபி) அமைப்பின் புதிய இயக்குநராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி மகேஷ் தீட்சித் வியாழக்கிழமை (ஜூன் 25) நியமிக்கப்பட்டார்.
புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்புதலை வழங்கியுள்ளது.
தற்பொழுது உளவுத்துறையின் தலைவராக இருக்கும் தபன்குமார் தேகாவின் பதவிக்காலம் முடிவடைவதைத் தொடர்ந்து, அந்த இடத்திற்கு மகேஷ் தீட்சித் கொண்டுவரப்படுகிறார்.
இந்திய உளவுத்துறையின் புதிய இயக்குநராக மகேஷ் தீட்சித் ஐபிஎஸ் நியமனம்: மத்திய அரசு உத்தரவு
