ஒடிசா மாநிலத்தின் கடலோர நகரமான பூரியில் உலகப் புகழ்பெற்ற ஜெகநாதர் ரத யாத்திரை இன்று (ஜூலை 16) விமரிசையாகத் தொடங்கியது.
12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற புண்ணியத் தலத்திலிருந்து எம்பிரான் ஜெகநாதர், அவரது மூத்த சகோதரர் பாலபத்திரர் மற்றும் சகோதரி சுபத்ரா தேவி ஆகியோர் தங்களது வருடாந்திர பயணமாகக் குண்டிச்சா கோயிலுக்கு ரதங்களில் புறப்பட்டனர்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வைக் காண நாடு முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பூரியின் முக்கிய வீதியான கிராண்ட் ரோடில் (படா தண்டா) திரண்டதால், அங்குப் பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
பூரி ஜெகநாதர் ரத யாத்திரையில் நெரிசல்! 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி! ஒருவர் பலி?
