பஞ்சாப், ஹரியானா, டெல்லி, நொய்டாவில் தொடரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு  

டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) பல பகுதிகளில் இன்று காலை மிதமான மழை பெய்தது.

இதனால் சில படங்களில் தண்ணீர் தேங்கியது.
டெல்லியில் உள்ள ஜன்பத், ஐடிஓ, மிண்டோ ரோடு, ஆசிரமம், ஆனந்த் விஹார் மற்றும் மயூர் விஹார் போன்ற பகுதிகளும், நொய்டா மற்றும் ஃபரிதாபாத்தின் பல இடங்களில் இன்று அதிகாலை மழை பெய்தது.

டெல்லியில் மேகமூட்டத்துடன் கூடிய கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) கணித்துள்ளது.
அடுத்த சில மணிநேரங்களில், வடக்கு டெல்லி, வடகிழக்கு டெல்லி, மத்திய டெல்லி, புது டெல்லி, தெற்கு டெல்லி, தென்கிழக்கு டெல்லி, கிழக்கு டெல்லி மற்றும் பிராந்தியங்களில் லேசான இடியுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

You May Also Like

More From Author