ஜனநாயக காங்கோ குடியரசில் தற்சமயம் பரவி வரும் எபோலா வைரஸ் பாதிப்பு, மனித வரலாற்றிலேயே மிக மோசமான மற்றும் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய 2014-2016 எபோலா பரவலை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் அபாயத்தில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.
2026 மே 15 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட இந்த எபோலா பரவலில், இதுவரை 4,300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 2,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த முறை பரவி வரும் எபோலா வைரஸ் ‘புண்டிபுக்யோ’ எனப்படும் மிகவும் அரிய வகையை சேர்ந்தது.
இதற்கு முன் 2007 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் மட்டுமே இவ்வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
காங்கோவில் எபோலா வைரஸ் பரவல்: 2014-16 பதிவை விட மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
