மத்திய கிழக்கு பகுதியில் ஏற்கனவே இஸ்ரேல் – ஈரான் இடையே ஏவுகணைப் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நேரடி ராணுவப் போர் வெடித்துள்ளது.
சர்வதேச எரிசக்தி போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் நீரிணை பகுதியில் பறந்து கொண்டிருந்த அமெரிக்க ராணுவத்தின் ‘அபாச்சி’ ரக ஹெலிகாப்டர் ஒன்றை ஈரானிய தற்கொலைப்படை ட்ரோன் தாக்கி சுட்டு வீழ்த்தியதை அடுத்து, செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) இரவு அமெரிக்கா ஈரானிய ராணுவ இலக்குகள் மீது அதிரடி வான்வழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
அமெரிக்க ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய ஈரான்; பதிலுக்கு ஏவுகணைகளை வீசிய அமெரிக்கா
