நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை தற்போதைய 543 ஆக நிரந்தரமாக வைத்திருக்க அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் எனக் கோரி தமிழ்நாடு முதல்வர் சி.ஜோசப் விஜய், பிரதமர் நரேந்திர மோடிக்கு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) அதிகாரப்பூர்வக் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்ட தொகுதி மறுவரையறை தொடர்பான சிறப்புத் தீர்மானத்தின் நகலை இணைத்து இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திற்குமான மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போதைய அளவிலேயே தொடர வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
543 இடங்கள் நிலையாக இருக்க வேண்டும்! பிரதமர் மோடிக்குத் தமிழ்நாடு முதல்வர் விஜய் கடிதம்
