இந்தியாவின் 80வது சுதந்திர தின விழாவில் செங்கோட்டையிலிருந்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “இன்று ஒவ்வொரு இதயமும் வந்தே மாதரத்தின் தாளத்துடன் துடிக்கிறது.
இன்று ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி, ஒவ்வொரு மனதிலும் மூவர்ணக் கொடி உயர்ந்துள்ளது” எனக் குறிப்பிட்டார்.
சுதந்திரத்திற்குப் பிறகு செங்கோட்டை மதில்களில் முதன்முறையாக வந்தே மாதரம் பாடல் முழுமையாக இசைக்கப்பட்டது வரலாற்று சிறப்புமிக்க தருணம் என்று கூறிய அவர், மகாத்மா காந்தி மற்றும் அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் தனது அஞ்சலியை செலுத்தினார்.
சிறிய கனவுகள் இனி செல்லாது! 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி ஆற்றிய உரை: முக்கிய அம்சங்கள்
