தனது மாதாந்திர மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியின் 137வது அத்தியாயத்தில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, வளர்ச்சியடைந்த இந்தியாவை (விக்சித் பாரத்) உருவாக்க நாடு முழுமையாக போதைப்பொருட்களிலிருந்து விடுபட வேண்டும் என வலியுறுத்தினார்.
விக்சித் பாரதத்திற்கான போதைப்பொருள் இல்லா இளைஞர்கள் என்ற அரசின் இயக்கத்தில் இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்று வருவதைப் பாராட்டிய அவர், போதைப் பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பாடல்கள், முழக்கங்கள் மற்றும் நாடகங்களை உருவாக்கக் கன்டென்ட் கிரியேட்டர்களுக்குக் கோரிக்கை விடுத்தார்.
விக்சித் பாரதம் உருவாவதற்கு போதைப்பொருள் இல்லாத இளைஞர்களே அவசியம்! பிரதமர் மோடியின் 137வது மன் கி பாத் உரை
