கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் தங்கி இருக்கும் பகுதியில் சிலிண்டர்கள் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சமைத்துக் கொண்டிருக்கும் போது சிலிண்டர்கள் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
கோவை நவ இந்தியா பகுதியில் சுமார் 40-க்கும் மேற்பட்ட தகரக் கொட்டகைகள் அமைத்து 500-க்கும் மேற்பட்டோர் தங்கி கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், கொட்டகையில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்த உடன் பீளமேடு மற்றும் கோவை தெற்கு தீயணைப்புத்துறையினர் நான்கு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேலும் அங்கு இருக்கக்கூடிய தகர கொட்டாய் உடைத்து தீயை அணைத்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஊழியர்கள் பணிக்குச் சென்ற போது இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மொத்தம் 7 சிலிண்டர்கள் வெடித்துள்ளதாகவும் இதில் யாருக்கும் எந்த விதமான உயிர்ச் சேதம் ஏற்படவில்லை. அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். கோவையில் ஒரே நேரத்தில் 7 சிலிண்டர்கள் வெடித்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
#JUSTNOW || நவ இந்தியா பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் தங்கி இருக்கும் பகுதியில் சிலிண்டர்கள் வெடித்து தீ விபத்து.
சமைத்துக் கொண்டிருக்கும் போது 20 சிலிண்டர்கள் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்#Coimbatore | #Fire | #Gas | #PolimerNews pic.twitter.com/IBrfAYAS1t
— Polimer News (@polimernews) August 29, 2026
