பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக முடக்கி வைத்துள்ள நிலையில், லடாக்கின் லே பகுதியில் உள்ள உப்ஷி என்ற இடத்தில் சிந்து நதியின் குறுக்கே இந்தியா தனது முதல் பாறை தடுப்பணையைக் கட்டியுள்ளது.
இயற்கை பாறைகளை மட்டுமே கொண்டு, சிமெண்ட் எதுவும் பயன்படுத்தப்படாமல் கட்டப்பட்டுள்ள இந்த அணை, நதியின் நீர்மட்டத்தை சுமார் 10 அடிகள் வரை உயர்த்தியுள்ளது.
இதன் மூலம் அப்பகுதி விவசாயிகள் வசந்த காலத்தில் தங்களின் விவசாய நிலங்களுக்குத் தேவையான நீரைப் பெற முடிகிறது.
சிந்து நதியில் இந்தியா கட்டிய முதல் பாறை அணை! பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுத்து லடாக்கில் விவசாயத்திற்கு திருப்பிவிட்டது
