“டிவியில் பிரபலமாக இதையா நம்புவாங்க!”.. நிர்வாண பூஜை செய்ய சொல்லிய சென்னை ஜோசியர்.. கனடா பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!! 

Estimated read time 1 min read

கனடா நாட்டின் குடியுரிமை பெற்று தற்போது சென்னையில் வசித்து வரும் பெண் ஒருவர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபலமடைய வேண்டும் என்ற தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முயன்றுள்ளார். அப்போது பெசன்ட் நகர் கடற்கரையில் கிளி ஜோசியம் பார்த்து வந்த திருநெல்வேலியைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவரை அவர் தற்செயலாகச் சந்தித்துள்ளார்.

அந்தப் பெண்ணின் ஆசையைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த அந்த ஜோசியர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் புகழின் உச்சிக்குச் செல்ல வேண்டுமென்றால் வீட்டில் நிர்வாண பூஜை செய்ய வேண்டும் என நம்பவைத்துள்ளார்.

ஜோசியரின் பேச்சைக் கண்மூடித்தனமாக நம்பிய அந்தப் பெண்ணும் தான் தங்கியிருந்த அறையில் நிர்வாணப் பூஜையில் ஈடுபட்டுள்ளார். அதன்பின் பெசன்ட் நகர் கடற்கரையில் நின்றுகொண்டே தன் செல்போன் மூலம் பூஜை முறைகளைக் கூறிய அந்த ஜோசியர், இதற்காக அந்தப் பெண்ணிடம் இருந்து 20,000 ரூபாயை கட்டணமாகவும் கறந்துள்ளார். ஆனால், இந்தச் சம்பவத்துடன் நில்லாமல், அந்தப் பெண்ணின் நிர்வாணக் காட்சிகளைத் தனது தொலைபேசியில் ரகசியமாகப் பதிவு செய்து கொண்ட அந்த நபர், அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் எனக் கூறித் தொடர்ந்து மிரட்டிப் பணம் பறித்துள்ளார்.

ஜோசியரின் இந்தத் தொடர் மிரட்டலால் மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண், கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதியன்று சென்னை மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்துத் தைரியமாகப் புகார் அளித்துள்ளார். புகாரின் தீவிரத்தை உணர்ந்த காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். குற்றாலத்தில் பதுங்கி இருந்த ஜோசியர் இசக்கிமுத்துவை செப்டம்பர் 3-ஆம் தேதியன்று நள்ளிரவில் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். இதுபோன்ற ஏமாற்றுபவர்களிடம் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என காவல்துறையினர் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

You May Also Like

More From Author