நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்பார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு அடுத்த ஆண்டு 75 வயதாகிறது என்றும், செப்டம்பர் 17(பிரதமர் மோடியின் பிறந்தநாள்) தான் அந்த பதவியில் அவருக்கு கடைசி நாள் என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதற்கு பதிலளிக்கும் வகையில் அமித்ஷா இந்த கருத்தை கூறியுள்ளார்.
“மோடிஜிக்கு 75 வயதாகிறது என்று மகிழ்ச்சியடையத் தேவையில்லை என்பதை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இண்டியா கூட்டணிக்கும் நான் சொல்ல விரும்புகிறேன். மோடிஜி பிரதமராக முடியாது என்று பாஜகவின் அரசியலமைப்புச் சட்டத்தில் எழுதப்படவில்லை. அவர் மீண்டும் பிரதமராகி ஆட்சியை நிறைவு செய்வார்.” என்று ஹைதராபாத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமித்ஷா கூறியுள்ளார்.