சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ, வங்காளத்தேசத்தின் வெளியுறவு அமைச்சர் கலீல் ரஹ்மானுடன் மே 6ஆம் நாள் பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது வாங்யீ கூறுகையில், வங்காளத்தேசத்துடன் தொடர்ந்து பாரம்பரிய நட்புறவை வளர்த்து, வங்காளத்தேசத்தின் வளர்ச்சிப் போக்கில் நம்பகமான கூட்டாளியாகச் செயல்பட சீனா விரும்புகிறது என்றார்.
கலீல் கூறுகையில், வங்காளத்தேசத்தின் புதிய அரசு சீனாவுடனான உறவுக்கு பெரும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. தைவானுடன் தொடர்புடைய விவகாரங்களில் சீனாவுக்கு பக்கபலமாக இருக்கும் என்று தெரிவித்தார்.
