நாகை- 6 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்கு!

நாகை அருகே கொலை வழக்கில் தொடர்புடைய ஆறு பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள கருப்பம்புலத்தைச் சேர்ந்த சிவராஜா அண்மையில் கொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலையில் தனுஷ்கோடி, சாம்ராஜ், ஆனந்த் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் 6 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து ஆறு பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author